Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களை எதிர்த்தும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் காந்தி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்பின் பேட்டியளித்த அய்யாகண்ணு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் விரைவில் சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம்.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 51% விவசாயம் செய்ய வில்லை எனில் விவசாயிகளுக்கு விவசாயி வாங்கிய மூன்றாண்டு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை மாநில அரசு செயல்படுத்த மறுக்கிறது.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கக் கூடாது விவசாயிகள் விதை நெல் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர்
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை அடிமையாக நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.